''அரச காணிகளை நண்பர்களுக்கு இரகசியமாக வழங்கியுள்ள சமல் ராஜபக்ஷ.." : அம்பலமான தகவல்


முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச, அரசியல் நண்பர்களுக்கு எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

 பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
 
 எம்பிலிப்பிட்டியவில் உள்ள வளவே வலயத்தில் உள்ள மகாவலி நிலங்கள், எந்தவொரு சாத்தியக்கூறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வளவே வலயத்தில் மகாவலி நிலங்களை வழங்கும் செயல்முறையை மறுபரிசீலனை செய்து, எந்தவொரு உற்பத்தி பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.

 இந்த நிலங்கள், உண்மையில் பயிர் செய்யும் அல்லது சாத்தியமான திட்டங்களைத் தொடங்க நம்பும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்  என அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த காணி மற்றும் நீர்ப்பாசனத் துறை துணை அமைச்சர் சுசில் ரணசிங்க,

சில நிலங்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன, குறிப்பிட்ட நிலங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால், விசாரணைகள் தொடங்கப்படலாம் என்றார்.